Wednesday, July 10, 2013

" கள்ளிக்காடாய்க் கிடந்த என் இதயத்தில்....

" இப்போதெல்லாம் ரோஜாக்களைத் தவிர ...

" வேறொன்றும் பூப்பதில்லை .....

" உனது கற்றை கார்குழலில்.....

" ஒற்றை ரோஜாவை காதோரம் சொருகி....

" மெய் தீண்டா விழிகளுக்கு மைத் தடவி....

" துடிக்கும் ரத்த நிற இதழ்கள் ஊருக்கே தீயிட....

" கண்ணாடி வளை குலுங்க ...

" சிற்றிடை மெல்ல அசைந்தாட....

" புல்மீது மேவும் பனித்துளி போல் ....

" மலர் பாதங்களை பதமாய் வைத்து...

" அன்றொரு நாள் என்னை கடந்து சென்றாயே ......

" அன்றுதான் எனது கள்ளிக்காடெல்லாம்...

" ரோஜா வனமானது !!!!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36478-topic#ixzz2YdS9YabJ
Under Creative Commons License: Attribution

முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது

" நிலவை பிடித்து பெண்ணாக வடித்து ...

" நட்சத்திரங்களைப் பறித்து ...

" அவளின் கார்குழலில் பூவாய்ச் சூடி....

" வானவில்லை இழுத்து வந்து ...

" சேலை நெய்து அவளுக்கு ஆடையாக்கி ....

" அவளின் பாரிஜாத மலர்ப் பாதங்கள் ...

" பூமியை முத்தமிட பதமாய் நடந்த......

" அன்றிலிருந்து தான் எனக்கு ....

" முப்பது நாளும் பவுர்ணமியாய் போனது !!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36486-topic#ixzz2YdQnm5HL
Under Creative Commons License: Attribution

சா(ஜா)தி கெட்டவள்

சா(ஜா)தி கெட்டவள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்னும்
வாழ்தலும் புணர்தலும்
அங்கீகரிக்கப்படும்
நிலையில்
.
.
விலங்கினைப் புணர்ந்த
கடவுள் கதைகள் கூட
காவியமான நாட்டில்...
.
.
ஆணோடு பெண்
பழகுதலும் புணர்தலும்
இயற்கை வழக்கம் தானே...
.
.எனக்கென ஒருவனை
கைகோர்க்க நினைக்கையில்
சாதியினர் ..........
முனகினர்
என்னை
.
.சாதிகெட்டவள் என்று
.
போங்கடா....உங்கள்
சாதியும் நீங்களும்
-facebook-

Tuesday, July 9, 2013

கே இனியவன் அம்மா கவிதைகள்

சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தெய்வம் தாய்
பிரசவத்திற்குப் பின்
வயிற்றில் இருந்த சுகத்தை
இதயத்திற்கு....!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36826-topic#ixzz2Yc6evifb
Under Creative Commons License: Attribution

கே இனியவன் அம்மா கவிதைகள்

தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36826-topic#ixzz2Yc6YOq3x
Under Creative Commons License: Attribution

காற்றுக்கு என் மீது கோபம்...

காற்றுக்கு
என் மீது கோபம்...
சுவாசிப்பது என்னை ..
நேசிப்பது அவளையா ...?

மழைக்கு
என் மீது கோபம் ..
நனைவது என்னில் ...
நினைப்பது அவளையா ..?

நிலவுக்கு
என் மீது கோபம் ..
ரசிப்பது என்னை ..
வர்ணிப்பது அவளையா ...?

மலருக்கு
என் மீது கோபம்
அழகு நான் என்னை வைத்து ..
அவளை ஒப்பிடுகிறாய் என்று ...?


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t36555-topic#ixzz2YbyT7zW5
Under Creative Commons License: Attribution